உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா

ஏரல்: குரங்கணி, முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா, இன்று (11ம்தேதி) நடக்கிறது.  புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இந்த ஆண்டு, ஆனிப்பெருந்திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த ஒன்பதாம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவான ஆனிப்பெருந்திருவிழா, இன்று (11ம்தேதி) நடக்கிறது. விழா நிகழ்ச்சியாக, இன்று காலை மங்கலஇசை, கிளாரினெட் இன்னிசை, ஆன்மிகசொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி, மதியம்சிறப்பு பூஜை, அன்னதானம், பக்தி இசை, மாலையில் பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 8:00 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10:00 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் இரவு 1:00 மணிக்கு ஆனி பெருந்திருவிழா சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து நாராயணசுவாமி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சிகளாக நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முதல் வரும்18ம்தேதி வரைமுத்துமாலை அம்மன், தங்கத் திருமேனியில் விசேஷ அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்துார், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை, குரங்­கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !