திருக்கண்டேஸ்வரத்தில் ஆனந்த காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :896 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. காலை 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோன்று, நெல்லிக்குப்பம் கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.