சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
ADDED :896 days ago
சிவகங்கை: சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயில் பூச்செரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் வீரமா காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.