ஆனி புதன்: லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :897 days ago
கோவை: சுந்தராபுரம் காமராஜ நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி கடைசி புதன்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிதார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.