உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திரம் மரியாதை

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திரம் மரியாதை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலிருந்து திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 1ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கவிலாச மண்டபத்தில் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் தலைமை அர்ச்சகர் ஒரு தட்டை, யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் ஊழியர்கள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்  திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒப்படைக்க புறப்பட்டுச் சென்றனர். இந்த வஸ்திர மரியாதை நாளை ஆடி 1ம் தேதி திருப்பதியில் ஒப்படைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !