உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் மகாமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

திருக்கோவிலூர் மகாமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருக்கோவிலூர், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 9:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, அக்னி காரியங்கள், மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்துள்ள, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !