உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணியில் ஆடி கார்த்திகை விழா

திருமலைக்கேணியில் ஆடி கார்த்திகை விழா

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி மாத கார்த்திகை விழா பூஜையில் நடந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

திருமலைக்கேணியில் ஆடி மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் சுப்ரமணியசாமிக்கும், உற்சவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு லட்சாச்சனை, தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அரோகரா கோஷமிட முருகப்பெருமான் கோவிலை சுற்றி வந்து சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் திண்டுக்கல், சாணார்பட்டி,நத்தம், கோபால்பட்டி, செந்துறை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அருகிலுள்ள காமாட்சி மௌனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !