சபரிமலையில் ஓணம் திருவிழா : சன்னிதானத்தில் மெகா அத்தப் பூக்கோலம்
ADDED :991 days ago
சபரிமலை சன்னிதானத்தில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு மெகா அத்தப்பூக் கோலம் போடப்பட்டிருந்தது.
கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சபரிமலை சன்னிதானத்தில் இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சன்னிதானத்தில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு போடப்பட்டிருந்து மெகா அத்தப்பூக் கோலம் அனைவரையும் கவர்ந்தது.