ஆவணி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :990 days ago
கோவை; நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ஆடீஸ் வீதி கருமாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள வேதபுரீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.