காமதேனு வாகனத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஐந்தாம் நாள் நவராத்திரி திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இலங்கை பக்தர்கள் பல வண்ண மலர்களை விவழிபட்டனர். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கோவில் மேலாளர் ஆனந்த் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடந்தது. நேற்று அதிகாலை அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பிலும் காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சார்பிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இரவில் வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளினார். வெளிபிரகாரத்தைச் சுற்றி அம்மன 3 முறைவலம் வந்தார்.