திருமுண்டிச்சரம் சிவன் கோவிலில் தமிழக கவர்னர் ரவி சாமி தரிசனம்
ADDED :761 days ago
விழுப்புரம் ; திருவெண்ணைநல்லூர் அடுத்த திருமுண்டிச்சரம் சிவன் கோவிலில் தமிழக கவர்னர் ரவி சாமி தரிசனம் செய்தார்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மா, இந்திரன் வழிபாடு செய்த தலம். தெட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமராமல் ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கிறார். திண்டி, முண்டி இருவருக்கும் இங்கு சிலை உள்ளது. பழமையான கல்வெட்டுகளில் திருமுடீஸ்வரம் என வழங்கப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 230 வது தேவாரத்தலம் ஆகும். சிறப்பு மிக்க இத்தலத்திற்கு இன்று தமிழக கவர்னர் ரவி வருகை புரிந்தார். மூலவர் சிவனை தரிசனம் செய்த கவர்னர், பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டார்.