சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் தரிசனம்
ADDED :708 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 6:30 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை மிகவும் குறைவான பக்தர்களே மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.