அருகம்புல், எருக்கு மாலை சாற்றி பக்தர்கள் விநாயகருக்கு பூஜை
ADDED :709 days ago
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி நந்தவன கல்யாண முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமாவளி, பஜனை பாடப்பட்டு அபிஷேகம் நடந்தது. அருகம்புல், எருக்கு மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.