சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி பூஜை
ADDED :739 days ago
கன்னிவாடி: தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.