உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை; உயர்ந்து கொண்டே சென்ற கருடனின் எடை.. பக்தர்கள் பரவசம்

நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை; உயர்ந்து கொண்டே சென்ற கருடனின் எடை.. பக்தர்கள் பரவசம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் விளங்கிறது.

இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 16ம் தேதி கொடியேற்றமும், மாலை சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா நடந்தது.  தொடர்ந்து கடந்த 17ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் பெருமாள்- தாயார் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் நான்காம் நாளில் உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. பெருமாள் தாயார் வாகன மண்டபத்தில் எழுந்தருளியும், கல்கருடனில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்து சேவை சாதித்தார். தொடர்ந்து சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து வந்தனர். கருடபகவான் மண்டபம் எழுந்தருளிய போது ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வந்து காட்சியளித்தார். இந்த கருடசேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சினிவாசப்பெருமாள் கல்கருட வாகனத்திலும், வஞ்சுளவல்லித் தாயார் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருள ஓலைச் சப்பர வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !