உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை; குதிரை வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்

பெருமாள் கோயிலில் வேடு பறி லீலை; குதிரை வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள்

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் இராப்பத்து விழாவில் வேடு பறி லீலை உற்சவம் நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, டிச., 13 முதல் பகல் பத்து உற்சவம் துவங்கி நடந்தது. தொடர்ந்து டிச., 22 மாலை பெருமாள் மோகினி அவதாரத்துடன் வலம் வந்தார். மறுநாள் காலை 5:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக பெருமாள் அருள் பாலித்தார். அன்று தொடங்கி இராப்பத்து உற்சவம் நடக்கிறது. இதன் 8 ம் திருநாளாக நேற்று இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இதன்படி திருமங்கையாழ்வார், திருமாலுக்கு கோயில் கட்ட எண்ணி வறுமை கொண்டார். தொடர்ந்து அரங்கனின் கோயில் கட்ட திருடனாக மாறினார். அப்போது பெருமாள் தாயாருடன் திருமண கோலத்தில் எழுந்தருளி திருமங்கை ஆழ்வாருக்கு முக்தி கொடுத்தார். இந்த லீலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் இராப்பத்து உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !