பக்தர்களிடம் வனத்துறை கட்டணம்; ராமானுஜ ஜீயர் சுவாமி தலைமையில் போராட்டம்
ADDED :727 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் பேச்சியம்மன் மற்றும் காட்டு அழகர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறை நுழைவு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி தலைமையில் ஹிந்து அமைப்புகள், விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.