உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமஜெயம் ; முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்!

ஸ்ரீராமஜெயம் ; முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்!

ராமபிரான் ராவணணை  போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் அனுமன் தான். அவருக்கு சீதையைக் கண்டதும்  உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர் பணிந்து அம்மா! என்று மட்டும் சொல்ல முயன்றார்.  ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் ஸ்ரீராமஜெயம் என்று எழுதிக் காண்பித்தார்.  அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள். முதன் முதலில் ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதியவர் அனுமன் தான்! அன்று முதல் லிகித நாமஜெபம் என்ற பெயரில் ராமநாமாவை பனை ஒலைகளில், காகிதத்தில் எழுதும் வழக்கம் உண்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !