தம்பி ‘கேவட்’
ADDED :634 days ago
வனவாசம் சென்ற ராம லட்சுமணர் கங்கை கரைக்குச் சென்றனர். அங்கு நின்ற ஓடக்காரன் ‘கேவட்’ முகமலர்ச்சியுடன் வரவேற்றான். ராமாயணத்தில் கேள்விப்படாத பாத்திரமாக இருக்கிறதே என வியக்கிறீர்களா? இந்த கேவட் தான் கம்ப ராமயணத்தில் ‘குகன்’ என அழைக்கப்படுகிறான். ஹிந்தியில் துளசிதாசர் எழுதிய துளசி ராமாயணத்தில் இவனுக்கு ‘கேவட்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவனுக்கு தர வேண்டிய கூலிக்காக சீதை தன் மோதிரத்தை கொடுத்தாள். இதை கண்ட கேவட், “சுவாமி! ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் நாம் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது” என மறுத்தான். அவனது அன்பை கண்ட ராமர், “உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகளாகி விட்டோம்” என்றார்.