புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த முருகன்
ADDED :761 days ago
கோவை; ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால தண்டபாணி, ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் தை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள உற்சவர் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.