முத்து இருளப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :615 days ago
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் கண்மாய் கரையில் அமைந்துள்ள விநாயகர், முத்து இருளப்பசாமி, பேச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.பிப்.10ல் மங்கள இசை,விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் தொடங்கி அனுக்ஞை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால,இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்பு மங்கல இசை, வேதபாராயணம், விமான கலச ஸ்தாபனம், பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கணபதி வழிபாடு, கோ பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், நடந்தது. கடம் புறப்பாட்டுக்கு பின்பு சிவ கணேசன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது. முத்து இருளப்பசாமி பரிவார தெய்வங்களுக்கு பால்,சந்தனம்,இளநீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் சிறப்புபூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுகுளத்தூர் ஓதுவார்கள் உறவின் முறையினர் செய்தனர்.