உத்தரகோசமங்கை மங்களநாதர் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :649 days ago
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதி முன்புறம் சேத்திர கால பைரவர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.
மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் சேத்திர கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, திரவியபடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. செவ்வரளி மாலை சூட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். * சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியின் செய்திருந்தனர்.