கோதண்டராம சுவாமி கோவிலில் சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பால் அபிஷேகம்
ADDED :610 days ago
கோவை; ராம் நகர் கோதண்டராம சுவாமி கோவிலில் மாசி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பொதுமக்கள் சிவலிங்கத்திற்கு தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.