ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிப்.2ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது. இன்று காலை கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தெய்வங்களுக்கு புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, கண்காணிப்பாளர் மகேஸ்வரி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் அம்சநிவேதா, நகர அவைத்தலைவர் சோமசுந்தரம், கமிஷன் கடை உரிமையாளர் சிவா, ஆராதனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.