உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் - சவுந்தரவல்லி தாயார் திருக்கல்யாணம்; மார்ச் 25 ல் நடக்கிறது

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் - சவுந்தரவல்லி தாயார் திருக்கல்யாணம்; மார்ச் 25 ல் நடக்கிறது

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மார்ச் 25 பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடக்க உள்ளது.மதுரை அழகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். அதேபோல் அழகர் கோயிலில் நடைபெறும் அனைத்து உற்ஸவங்களும், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 24 இரவு 7:00 மணிக்கு அனுக்கையுடன் திருக்கல்யாண விழா துவங்குகிறது. மார்ச் 25 காலை 9:00 மணி முதல் 10:15 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயாருக்கு திருக்கல்யாண மகோத்ஸவம் நடக்கும். அன்று தொடங்கி தினமும் ஊஞ்சல் சேவையில் சுவாமி, தாயார் அருள்பாளிக்கின்றனர். மார்ச் 28 மாற்று திருக்கோலமும், மார்ச் 29 காலை அபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் பெருமாள் பூப்பல்லக்கில் வீதி வலம் வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !