குமரக்கடவுள் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :577 days ago
கமுதி; கமுதி அருகே மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு முதுகுளத்தூர்,கமுதி,அபிராமம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக மேலக்கொடுமலூர் முருகன் கோயிலுக்கு வந்தனர். குமரக்கடவுள் முருகனுக்கு எலுமிச்சம், பழச்சாறு, திரவிய பொடி, நெல்லிப்பொடி, பால்,தயிர், பஞ்சாமிர்தம்,ஆரஞ்சு,மாதுளை,பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.