மண்டூக மகாமுனிக்கு வரமளித்த வடமதுரைசவுந்தரரராஜப் பெருமாள்
ADDED :546 days ago
வடமதுரை; சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள், மண்டூக மகாமுனிக்கு வரமளித்தார்.
வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் 74ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா இன்று நடைபெற்றது. கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் சுவாமி, பால்கேணி சென்று மண்டூக முனிவருக்கு வரமளித்தார். இதனை தொடர்ந்து வடமதுரை நகருக்குள் சென்று பல்வேறு திருக்கண்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கண்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் ஏப்.25ம் தேதி இரவு வரை நடைபெறும். ஏப்.26 காலை சுவாமி சன்னதி திரும்புவார். விழா ஏற்பாட்டினை தக்கார் தங்கலதா, செயல் அலுவலர் கனகலட்சுமி, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.