3800 கி.மீ தரையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடி ராமேஸ்வரம் வரும் பக்தர்..!
ADDED :594 days ago
திருவண்ணாமலை; தரையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடி கங்கோத்ரியில் இருந்து ராமேஸ்வரம் வருகிறார் ராஜஸ்தான் பக்தர்.
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி முதல் ராமேஸ்வரம் வரை 3800 கிலோமீட்டர் தரையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜகிரி மகராஜ் தற்போது திருவண்ணாமலை வந்துள்ளார். உலக அமைதிக்காகவும், சனாதன தர்மத்தை காக்கவும் இந்த புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.