வைகாசி கடைசி வெள்ளி; கருமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :496 days ago
கோவை; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.