தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
ADDED :764 days ago
திருப்பூர்; ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி திருப்பூர் மாவட்டம் தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் காவிநிநிற வஸ்த்திரத்தில் துளசி மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.