உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி கிருத்திகை; குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி கிருத்திகை; குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை ; மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி கிராமம் குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு, புஷ்பம் மற்றும் ராஜ அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !