உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு; நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை வழிபாடு; நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக நாளை (ஜூலை 3) முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் நாளை ஜூலை 3ல் பிரதோஷம், 5ல் ஆனி மாத அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு நாளை ஜூலை 3 முதல் ஜூலை 6 முடிய 4 நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !