வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா கோலாகலம்
ADDED :546 days ago
திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில், வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம், ஆடி திருவிழா ஏழு வாரங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு, முதல் வார விழா, கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது வார விழாவில், மூலவர் அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம், 308 பால்குடம் அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, கூட்டு வழிபாடு, கூழ்வார்த்தல் விழாவுடன், தீபாராதனை நடந்தது. இரவு, வேண்டவராசி அம்மன் விசேஷ புஷ்ப அலங்காரத்தில், வீதி உலா வைபவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, வேண்டவராசி கோவில் நிர்வாகம் மற்றும்கிராமத்தினர் செய்துவருகின்றனர்.