அன்னூர் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :11 hours ago
அன்னூர்: ஆலாம்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் இன்று நடந்தது. நாரணாபுரம் ஊராட்சி, ஆலாம்பாளையத்தில் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா இன்று நடந்தது. இதில் மாகாளியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், நெய், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.