உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தாலங்குடி குழந்தையானந்த சுவாமி குருபூஜை விழா

சித்தாலங்குடி குழந்தையானந்த சுவாமி குருபூஜை விழா

சோழவந்தான்; சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கண்மாய் கரையில் குழந்தையானந்த சுவாமி ஜீவசமாதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி முதல் வாரத்தில் நடக்கும் குருபூஜை இன்று முதல் நாள் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. சுவாமிக்கு காசி, அழகர்கோவில் உள்ளிட்ட புனித தீர்த்தம் மற்றும் 21 வகை சிறப்பு அபிஷேகம், மலர்களால் அர்ச்சனை செய்தனர். சாதுக்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (ஆக 20), சுவாமி ஜீவசமாதி அடைந்த நாளையொட்டி சிறப்பு அபிஷேகம், 3 வேலை அன்னதானமும், ஆக.,21,ல் சிறப்பு பூஜை, 22ல் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சாதுக்களிடம் மடிப்பிச்சை கேட்டு உணவு சாப்பிடும் வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !