கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் 353ம் ஆண்டு ஆராதனை விழா
ADDED :413 days ago
கடலுார்; கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஸ்ரீ மத்வ சித்தாந்த சேவா சங்கம் சார்பில் ராகவேந்திர சுவாமிகளின் 353ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. விழாவையொட்டி, இன்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடலுார் ஸ்ரீ விஜய விட்டலா மகளிர் அணியினரின் பஜனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.