மஞ்சனைப்பேச்சி முத்து மாரியம்மன் கோவிலில் முளைக்கொட்டு விழா
ADDED :410 days ago
தேவகோட்டை; தேவகோட்டை நடுத்தெருவைச் சேர்ந்த மஞ்சனைப்பேச்சி முத்து மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா 13 ந்தேதி கணபதி ஹோமம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் போது சங்காபிஷேகம் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தன. வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். தினமும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம் முக்கிய வீதிகளில் உலா வந்து பூஜைகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று இரவு பக்தர்கள் முளைப்பாரி, கரகம் எடுத்து வந்து முளைக்கொட்டு செய்து அம்மனை வழிபட்டனர்.