உப்பூர் வெயிலுகந்த விநாயகர் சதுர்த்தி விழா; யானை வாகனத்தில் சுவாமி உலா
ADDED :479 days ago
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா ஆக.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் மாலையில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. ஐந்தாம் நாளான நேற்று மாலை, யானை வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார். முன்னதாக அலங்காரம் செய்யப்பட்ட மூலவர் மற்றும் உற்சவருக்கு நடந்த அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக செப்.5 ல் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடைபெற்று, செப்.7 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.