உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி கடைசி சனிக்கிழமை, ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் பெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல், ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -01 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் லட்சுமி நாராயண பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !