உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்: விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று நந்திதேவருக்கும், பதஞ்சலி மனோகரர் சுவாமிக்கும், பிரதோஷ சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள், பஞ்சகவ்யம்,  பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ  அலங்காரத்தில்  அருள்பாலித்தார்.  நாட்டில்  மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சந்திரசேகர சிவாச்சாரியார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !