விருதுநகர் சிவன் கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்
ADDED :341 days ago
விருதுநகர்; விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு கோயில்களில் விஷேச வழிபாடுகள், சங்காபிஷேகம் நடந்தது. விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதை முன்னிட்டு சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு புனித நீர் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.