உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலம்

கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலம்

பாலக்காடு; கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கேரள மாநிலம் பாலக்காடு பிராயிரியில் உள்ளது கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் கார்த்திகை மாதம் ஆறாட்டு உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. 5:30 மணி முதல் அபிஷேகம், பஞ்சகவ்யம், கலசாபிஷேகம் ஆகியவை நடந்தது.

காலை 10:30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் தாழ்ச்சீவேலி நடைபெற்றன. 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலை 5:00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் பகவதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6:15 மணிக்கு அம்மனுக்கு நிறமாலை, சந்தனக்காப்பு ஆகிய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவில் சுற்று விளக்கேற்றி பக்தர்கள் வழிபடும் நிகழ்வு நடந்தன. 6.30க்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. 9:00 பாண்டிமேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளும் நிகழ்வு நடந்தன. தொடர்ந்து நடந்த அத்தாழபூஜையுடன் உற்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !