உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள்; கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு

குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள்; கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு

சிவகங்கை; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.சண்முகநாதன் ஆறு திருமுகங்களோடும், பன்னிரு திருக்கரங்களோடும், எழுந்தருளியுள்ள சிறப்பு வாய்ந்தது குன்றக்குடி திருத்தலம். மயிலின் வடிவாக காட்சியளிக்கும் இத்திருத்தலத்தில் இன்று கார்த்திகை தீபமேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று திருக்கார்த்திகை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மாலை 5.45 மணிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன பூஜை மடத்தில், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !