உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் மகா கும்பாபிஷேகம்

திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் மகா கும்பாபிஷேகம்

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தபோவனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 51 வது ஆராதனை விழாவில் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

திருக்கோவிலூர் அடுத்த தபோவனத்தில் சஹஜ சமாதியில் அருள்பாலித்து வரும் ஞானசித்தர் சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் 51 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், பாத பூஜையுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று விசேஷ பாத பூஜை, மணிமண்டபம் சத்குரு நாதர் சன்னதியில் மகாதீபாராதனை, அதிர்ஷ்டத்தில் 108 கலச அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், அலங்காரம் மகா தீப ஆராதனை நடந்தது.மாலை வினய் சந்திர மேனன் பாகவதர் மற்றும் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. விழாவின் முக்கியக ஆராதனை தினமான நாளை காலை 5:30 மணிக்கு விசேஷ பாத பூஜை, லட்சாக்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜைகள், மதியம் 1:30 மணிக்கு தீர்த்த நாராயண பூஜை, நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஞானானந்த தபோவன அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !