தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ராமேஸ்வரம்; தொடர் விடுமுறை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை யொட்டி தமிழகத்தின் பல பகுதிகள் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனத்தில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். இதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வாகனங்களை ஒருவழி பாதையாக மாற்றினாலும் வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் வருகையால் ராமேஸ்வரம் நகர் பகுதி நெரிசலில் திணறியது.