உலகளந்த பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கல்
ADDED :264 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சமூக ஆர்வலர் டி.ஜி. கணேஷ் இனிப்பு வழங்கினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதிகாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். அனைவருக்கும் சமூக ஆர்வலர் டி.ஜி. கணேஷ் இனிப்புகளை வழங்கினார். முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் மற்றும் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டனர்.