உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை; நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

தை அமாவாசை; நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

தேவிபட்டினம்; தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.


தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று தை அமாவாசை தினம் என்பதால், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவபாஷாண கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தனித்தனி பாதைகள் உருவாக்கப்பட்டு, பக்தர்களுக்கான வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மாரிமுத்து, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கண்காணித்து பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !