உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் பக்தருக்கு மூங்கில் காட்டில் சுவாமி காட்சியளித்த வைபவம்

நெல்லையப்பர் கோயிலில் பக்தருக்கு மூங்கில் காட்டில் சுவாமி காட்சியளித்த வைபவம்

திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ராமக்கோனுக்கு சிவபெருமான் காட்சியளித்த வைபவம் நடந்தது. 


திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.,1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவபெருமானின் திருவிளையாடலை நினைவில் கொள்ளும் வகையில் நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழாவின் 4ம் நாளில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கும். இதையொட்டி கோயிலில் தாமிரசபை பிரகாரம் அருகே தல விருட்சம் மூங்கில் மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு கோடாரியால் வெட்டிய நிகழ்வை அறிவுறுத்தும் வகையில் இன்று பகலில் ராமக்கோனுக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் வைபவம், சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !