சித்திரை திருவோணம், தேய்பிறை அஷ்டமி; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :183 days ago
கோவை; சித்திரை மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு கோவை உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதரா புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
*சித்திரை தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவை சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ விநாயகர் கோவிலில் அமைந்துள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்தில் சர்வ புஷ்ப அலங்காரத்துடன் சொர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.