நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :161 days ago
திண்டிவனம்; நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதி, இலுப்பை தோப்பு, நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சித்தர பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று இரவு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் சாணக்கிய கல்வி குழும தலைவர் தேவராஜ், திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன்,முன்னாள் கவுன்சிலர்கள் வேல்முருகன், வடபழனி, வழக்கறிஞர் கார்த்திக், அன்னைசஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.